
அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அமைச்சர் நிர்மல்குமார் வேண்டுகோள்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


























