தமிழ்நாட்டில் பல்வேறு வகையான கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு, பல்லவப் பேரரசு பின்னர் வந்த விஜயநகரப் பேரரசு மற்றும் ஆங்கிலேய அரசுகளால் பல கோட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை, செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை, மலைக்கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டை, திண்டுக்கல் கோட்டை, தஞ்சாவூரில் உள்ள மனோரா கோட்டை, திருமயம் கோட்டை, உதயகிரி மற்றும் வட்டக் கோட்டை ஆகிய கோட்டைகள் புகழ்பெற்றவைகளாக விளங்குகின்றன.