கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், டம்ப்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பள்ளியில் இன்று (பிப்.11) நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் தாக்குதல் நடத்திய நபரும் அடக்கம். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். பள்ளியில் 6 சடலங்களும், அருகே உள்ள வீட்டில் 2 சடலங்களும் மீட்கப்பட்டன. தாக்குதல் நடத்தியவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல். தற்போது அப்பகுதியில் ஆபத்து நீங்கியதாக போலீஸ் அறிவித்துள்ளது.