திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட காதல் காரணமாக நடந்த குழந்தை திருமணங்களால் நூற்றுக்கணக்கான பருவ வயது பெண் குழந்தைகள் கர்ப்பம் ஆகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2025ஆம் ஆண்டில் ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் தாலுக்காக்களில் பல குழந்தை திருமணங்கள் நடந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக 300 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.