வார இறுதி நாட்களை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்து வரும் செப்.19-ம் தேதி 355 பேருந்துகளும், 20-ம் தேதி 350 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டிலிருந்து அதே தேதிகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 200 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துக்கு துறை தெரிவித்துள்ளது. மேலும், மாதவரத்திலிருந்தும் தலா 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.