மூலப்பொருட்களின் இருப்பை உறுதி செய்யும் பொருட்டு பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில், பருத்தி விலை உயர்வு மற்றும் நூல் விலை உயர்வால் இத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11% வரியை ரத்து செய்ய வேண்டும். இது ஏற்றுமதியை அதிகரிக்கவும், உலக சந்தையில் போட்டித்திறனை மேம்படுத்தவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.