12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தேவைப்படும் வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள், அந்தந்தப் பள்ளிகளிலேயே சிறப்பு முகாம்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்கள் சான்றிதழ்களுக்காகத் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவது தவிர்க்கப்பட்டு, பள்ளிகளிலேயே எளிதாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.