செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம், பூதூர் ஊராட்சிக்குட்பட்ட ஈசூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150 திமுக தொண்டர்கள் தங்களை தவெகவில் இணைந்துக் கொண்டனர்.
தவெகவைச் சேர்ந்த ஜி.சிவனேசன் மற்றும் ஜி.பரத் தலைமையில், தவெக மாவட்ட செயலாளர் எம்.எஸ். பாலாஜி மற்றும் மாவட்ட பொருளாளர் சபரி முன்னிலையில் நேற்று (மே 15) தவெகவில் இணைந்தனர். தவெக தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், மாற்றுக்கட்சியினர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.