மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். தஷ்காய் பகுதியில் சட்டவிரோதமாக இந்த சுரங்கம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று (பிப்., 05) திடீரென அங்கு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அசாமைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.