ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 6 கட்டங்களாக வழக்குப்பதிவான நிலையில், ஒரு வழக்கில் 26 பேரும், 2வது வழக்கில் 35 பேரும், 3வது வழக்கில் 34 பேரும் என மொத்தம் 161 பேரை விடுதலை செய்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி இன்று உத்தரவிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்த ஷமீல் அகமது (26) என்பவரின் மரணத்துக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.