இந்தியாவின் எரிசக்தி தேவையை உறுதி செய்யும் வகையில், 92,612 டன் எல்பிஜி எரிவாயுவுடன் 'ஜக் வசந்த்' மற்றும் 'பைன் கேஸ்' ஆகிய இரு கப்பல்களும் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணையை கடந்துள்ளன. இது குறித்து மாநிலங்களவையில் இன்று (மார்ச் 24) பேசிய பிரதமர் மோடி, அனைத்து அரபு நாடுகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ராஜதந்திர நடவடிக்கை மூலமாக இந்த பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதே எங்களது இலக்கு. இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.