சென்னையில் முந்திரிப் பருப்பு சாப்பிட்ட இரண்டு வயதுக் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்திரிப் பருப்பு சாப்பிட்ட குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், குடும்பத்தார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு, குழந்தை உயிரிழந்தது மருத்துவ பரிசோதையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.