இந்தியாவின் வறுமைக் குறைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், “தேசிய பன்முக வறுமைக் குறியீட்டின்படி, 2013–14 முதல் 2022–23 வரையிலான காலத்தில் 24.8 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீள இந்தியா உதவி செய்துள்ளது. இதனால் நாட்டின் பன்முக வறுமை விகிதம் 29.2%ல் இருந்து 11.3% ஆகக் குறைந்துள்ளது. மத்திய அரசு திட்டங்கள் இந்தியாவின் வறுமையை ஒழிக்க உதவி உள்ளது” என குறிப்பிட்டுள்ளது.