தூத்துக்குடி கடற்கரை சாலையில் மரத்தில் கார் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இன்று (நவ., 19) அதிகாலை நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பயிற்சி மருத்துவர்கள் சாருபன், ராகுல் செபாஸ்டியன், முகிலன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த கிருத்திக்குமார், சரண் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமானது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.