பாகிஸ்தான் வடக்கு பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. புர்ஹானின் வடகிழக்கில் 11 கி.மீ தூரம், 14 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த அதிர்வு கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து தகவல் இல்லை. அண்மையில் ஏற்பட்ட பல நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர்.