முதலமைச்சர்
விஜய் உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் தற்போது வரை 480 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலன் மற்றும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் (500 மீட்டர் சுற்றளவிற்குள்) செயல்படும் 717 கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். மீதமுள்ள கடைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.