உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் பவாலி பைபாஸ் பகுதியில் 5 பேர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். சம்பவமறிந்து விரைந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.