சென்னை போரூர் அருகே மகள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவர் தனக்குத் தெரிந்த 38 வயது பூ வியாபாரி பெண்ணை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்த சமயத்தில், முதியவரின் கவனத்தைத் திசைதிருப்பி பீரோவிலிருந்த 6½ பவுன் நகைகளை அந்தப் பெண் திருடிச் சென்றுள்ளார். ஊர் திரும்பிய மகள் நகைகள் மாயமானதைக் கண்டு தந்தையிடம் விசாரிக்க, உண்மைகள் வெளிவந்தன. புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.