நெல்லை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் 800 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன், உத்தம பாண்டியன் போன்ற மன்னர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தடுப்பணை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால், இடிந்த கோயில்களின் தூண்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.