ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (டிச.02) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு கிழக்கே 40 கிமீ தொலைவில் தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது.