கட்டிடம் இடிக்கும் பணியில் இருந்த தொழிலாளர்களிடம் இலவசமாகச் செங்கல், ஜல்லி கேட்டு மிரட்டிய தவெக செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய்கிருஷ்ணன், அதற்கு மறுப்பு தெரிவித்த கிரேன் ஓட்டுநர் மற்றும் கட்டிட உரிமையாளரைத் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.