பீகார் மாநிலத்தில், இருளின் மறைவில் காதல் லீலைகளில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் கையும் களவுமாகப் பிடிபட்டனர். பின்னர், அப்பெண்ணின் கணவர் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர். முன்னதாக, அந்த இளைஞருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.