வேலூரில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் 19 வயது கல்லூரி மாணவியை விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். கல்லூரிக்கு சென்ற மாணவி பேச மறுத்த ஆத்திரத்தில், விக்னேஷ் அவரை வழிமறித்து கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.