கரூரில் முதல்வர்
விஜய் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்கும் பணியின்போது, கிரேன் பெல்ட் அறுந்து இரும்பு ராடு விழுந்ததில் 5 இளைஞர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த விபத்தை தொடர்ந்து தற்பொழுது அங்கு நிலைமை சீரமைக்கப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு கரூரில் நேரிட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நாளை (ஜூலை 10) முதல்வர்
விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.