கடந்த 2023ஆம் ஆண்டு தெலங்கானாவின் ஹைதராபாத்தில் நடிகர் நவ்தீப் பல்லபோலு மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் நவ்தீப்பிடம் இருந்து எந்த போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும், எப்ஐஆர், சாட்சியங்களின் வாக்குமூலத்தில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டி வழக்கிலிருந்து விடுவித்தார்.