தணிக்கை சிக்கலால் வெளியாகாமல் உள்ள, ஹெச்.வினோத் இயக்கத்தில்
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக நடிகர்
ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராகத் திரை அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளைக் கண்டறிந்து அரசு கடுமையான தண்டனை வழங்கி இத்தகைய குற்றங்கள் தொடராமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.