கொரோனா ஊரடங்கின் போது மும்பையில் தனியாக இருந்ததால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளானதாக நடிகர் விஜய் வர்மா மனம் திறந்துள்ளார். தனிமையை தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழுததாகவும், படுக்கையை விட்டே நகராமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை கவனித்த நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா கான், வீடியோ காலில் தனக்கு உறுதுணையாக இருந்தார் என்றும், அதன்பிறகு ஒரு மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றதாகவும் விஜய் வர்மா கூறியுள்ளார்.