சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். கிட்னி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக தான் பேசியதால், திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். தவெகவிற்கு வாக்களிக்காத காரணத்தால் தன் மீது தாக்குதல் நடத்துவதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.