ஆதவ் அர்ஜுனா விளையாட்டு நிர்வாகி, தேர்தல் வியூக நிபுணர் மற்றும் அரசியல்வாதி எனப் பல முகங்கள் கொண்டவர். திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட இவர், இந்திய மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார். 2015 - 2021 வரை திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் வியூக பணிகளில் ஈடுபட்டார். பின்னர் “வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்” நிறுவனத்தை தொடங்கி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பணிகளிலும் செயல்பட்டார். தற்போது தவெகவில் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.