இளங்கலை படிப்புகளுக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு

6771பார்த்தது
இளங்கலை படிப்புகளுக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை பட்ட படிப்புகளில் (UG) சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு நடப்பு கல்வியாண்டிலேயே அமலுக்கு வந்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகளும், SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC/ DNC பிரிவினர் மற்றும் மாணவிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் வயது வரம்பு உயர்வால், பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு உயர்கல்வி கற்க விரும்பும் பலர் பயன்பெறுவார்கள்.

தொடர்புடைய செய்தி