மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கடந்த ஜன., 28 அன்று விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் துணை முதலமைச்சரானார்.
அதே போல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அஜித்பவாரின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சுனேத்ரா பவார் மற்றும் கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து மனு அளித்தனர்.