நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினிமணி
(84) மறைவுக்கு, அவரும் அவரது சகோதரர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நாளை காலை சென்னை பாலவாக்கம் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கு முற்றிலும் தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்றும், இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் இந்த துயரான நேரத்தில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நன்றி: நியூஸ் 18