டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இடைக்கால தடையை நீக்க வேண்டுமென ED தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ED நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.