அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு தவெக நிர்வாகிகள் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், நியமனங்கள் நியாயமாகவே நடப்பதாக நீதிபதி முகமது சபீக் கருத்து தெரிவித்துள்ளார். தற்காலிக நியமனங்களில்
திமுக, அதிமுக வழக்கறிஞர்களும் பரிசீலிக்கப்படுவதை மனுதாரரே ஒப்புக்கொண்டுள்ளார் என நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முதலமைச்சர்
விஜய், அமைச்சர் ஆனந்த் பெயர்களை நீக்க உத்தரவிட்டார்.