தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவின் தேர்தல் பணிகளை கண்காணிக்க, சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். முதன்மை கண்காணிப்பாளர்களான புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்களான ஜேசிடி பிரபாகர், சத்தியபாமா, அருண்ராஜ், நிர்மல்குமார், மரிய வில்சன், சபிபுல்லா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.