நாடு முழுவதும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிக்க, அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,023 இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இளநிலை படிப்புகளுக்கு 5,023 இடங்களும், முதுநிலை படிப்புகளுக்கு 5,000 இடங்களும் ஒதுக்கப்படும். இந்த புதிய திட்டத்தின் கீழ், 2025-2026 முதல் 2028-2029 ஆம் ஆண்டுக்குள் இந்த இடங்கள் அமல்படுத்தப்படும். மேலும், மருத்துவக் கல்வி, ஆசிரியர்கள் நியமனம், தகுதி வரையறை குறித்து தேசிய மருத்துவ ஆணையம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.