அரியலூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூறாவது பிரசவம் வெற்றிகரமாக நடைபெற்றதை முன்னிட்டு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஆண்டு மார்ச் 25 அன்று தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் இதுவரை நடைபெற்ற அனைத்து பிரசவங்களும் சுகப்பிரசவமாகவே அமைந்துள்ளன.