அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் தனியார் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியின் வேனில் சென்ற மாணவர்கள் மனகெதிசுங்க சாவடி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் ஒரு ஆசிரியர் காயம் அடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் அதிக காயமடைந்த மாணவர்களை அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வாய்ப்பு உள்ளது.