ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனம் சார்பாக, நகர்புற நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், கிராம ஊராட்சி தூய்மைகாவலர்கள், குடிநீர் வழங்கும் OHT ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், பள்ளி சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் ஊக்குநர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி புதன் கிழமை, 12.11.2025 அன்று மாலை 5 மணி அளவில் மாவட்ட தலைநகர் அரியலூரில் அண்ணா சிலை அருகில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.