அரியலூர் மாவட்டம் பொய்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், அரியலூர் அருகே தங்க நகரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.