அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று குழந்தை திருமணத்தின் தீமைகள் குறித்து ஓவியங்கள் வரைந்தனர். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தை திருமணத்தை தடுப்பதின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.