அரியலூர் மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் இன்று (நவம்பர் 29) மாவட்ட ஆட்சியர் தனசாமியிடம் முறையிட்டனர். அப்போது கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் தீபா சங்கரி விவசாய கடன் குறித்து பேசும் போது யூரியா உரங்கள் வந்துவிட்டதாகவும், இன்று மாலைக்குள் பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் வந்துவிடும் எனவும், விவசாயிகள் அவற்றைப் பெற்று பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.