அரியலூர் அருகே வாலாஜாநகரம் ஊராட்சி ஏரிக்கரையில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் 2000 பெருந்திரள் பனை விதைகள் நடும் இயக்கத்துடன், அவர் ஒரு பனை விதையினை நட்டு வைத்தார். இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்துவது போன்ற பசுமையை நோக்கிய பயணமாக அரியலூர் மாவட்டத்தில் பனை விதைகள் நடும் பணி தொடரும் என ஆட்சியர் தெரிவித்தார்.