அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சைபர் குற்றங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் அனைத்து வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான கருத்துகளை தெரிவித்தார்.