நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த இரண்டு நாட்களாக தந்தை பெரியார் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இதற்கு பல்வேறு அமைப்பினர் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செந்துறை காவல் நிலையத்தில் பெரியார் குறித்து அவதூறு பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிட கழகத்தினர் சார்பில் மாவட்ட செயலாளர் தலைமையில் புகார் மனு அளித்தனர்.