செந்துறை: குழந்தையுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அமைந்துள்ள மனப்பத்தூர் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் காப்பு கட்டி நோன்பு இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து திரௌபதிஅம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக தேரோட்டமும் நடைபெற்றது. மக்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்.
