அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாமக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியை குடிசையில்லா தொகுதியாக மாற்றுவதே தனது முதல் பணியாக இருக்கும் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் பாமக, வன்னியர் சங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.