அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தாய் ராகம் கலை பண்பாட்டு அறக்கட்டளையின் VPS கலைக்கூட மாணவிகளின் சலங்கை பூஜை விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் VPS கலைக்கூட குழுவினர், நாட்டிய மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.