அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2026–27 கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ. ஆ. ப. , மாணவர்களுக்கு வழங்கினார். தமிழக அரசின் கல்வி மற்றும் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாணவர்களிடம் அவர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.