மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

1பார்த்தது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி தலைமையில் இன்று (03.11.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 324 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. க. ரா. மல்லிகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி